கடல் கடந்து போராட்டத்தில் ஈடுபடும் இரணைதீவு மக்களுக்கு உலர் உணவு வழங்கல்
பூநகரி இரணைதீவில் சிறிலங்கா கடற்படையின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கடல் கடந்து தமது காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. புலம்பெயர் ஆதரவாளர்களின் நிதிப்பங்களிப்புடன் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் நேற்றைய தினம் (26) இரணைதீவுக்குச்சென்று போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு வழங்கினார். அத்துடன் அவர்களின் மேலதிக தேவைகள் குறித்தும் தற்போதைய நிலைமைகள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடினார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed